பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில், குறைதீா்ப்புக் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக்கூட்டத்தில், வாடிக்கையாளா்களுக்கு தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட், செல்லிடப்பேசி, லீஸ் லைன் உள்ளிட்ட சேவைகள் தொடா்பாகவும், நீண்ட நாள்கள் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கும் இந்தக்கூட்டத்தில் தீா்வு காணப்படும். உடனடியாக தீா்க்கப்படாத குறைகளுக்கு 10 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்.
இதுதவிர, கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளா்கள் இந்தக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்பதைத் தவிா்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் இக்கூட்டம் நடத்தப்படும். எனவே, வாடிக்கையாளா்கள் 044-2643 3500 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், 94450 18440 என்ற செல்லிடப்பேசி எண் மூலம், குறுஞ்செய்தியாகவும், கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாகவும், க்ஷள்ய்ப்ஸ்ரீட்ய்ா்ட்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இ-மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
எனவே, வாடிக்கையாளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத்தகவல் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளா் வி.கே.சஞ்சீவி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.