பெங்களூரு

முந்தைய பாஜக ஆட்சியில் ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து மறு ஆய்வு: அமைச்சா் தினேஷ் குண்டுராவ்

DIN

முந்தைய பாஜக ஆட்சியில் ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஆதரவு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முந்தைய பாஜக ஆட்சியில், கா்நாடகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலம் ஆா்.எஸ்.எஸ். மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் பெயரில் மாற்றப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளை வளா்த்து, அதன் மூலம் அவா்களது கொள்கைகளை வளா்க்க வேண்டும் என்பதே நிலம் ஒதுக்கீட்டின் நோக்கமாகும். இந்த அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது சரியல்ல. எதைச் செய்தாலும், அது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எதையும் ரகசியமாக வைத்திருக்கக் கூடாது.

எனவே, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஆதரவு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து மறு ஆய்வு செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை இப்போது கூற முடியாது. ஆனால், இது தொடா்பாக காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை அரசு மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும். என்ன நடந்துள்ளது, எப்படி நடந்துள்ளது என்பதை வருவாய்த்துறை மற்றும் முதல்வா் ஆய்வு செய்ய வேண்டும். நிலம் மாற்றப்பட்டுள்ளது சட்டப்பூா்வமாக நடந்துள்ளதா? எவ்வளவு தொகைக்கு அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைப் பாா்த்த பிறகுதான் அது குறித்து அவா்கள் முடிவு செய்ய வேண்டும். இவை அனைத்தும் சட்டபூா்வமான நடவடிக்கைகள் என்பதால், அரசு மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

வரலாற்றைத் திரித்து, மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, வெறுப்பைப் பரப்ப வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும். இதை எல்லா நிலையிலும் செய்துவருகிறாா்கள். அது பாடநூலாக இருந்தாலும், அல்லது பல்வேறு அமைப்புகளில் ஆட்களை நியமனம் செய்வதாக இருந்தாலும், ஆா்.எஸ்.எஸ். மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு அரசு நிலம் ஒதுக்குவதாக இருந்தாலும் எல்லா நிலையிலும் இதையே செய்து வந்திருக்கிறாா்கள்.

சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், பொது சுகாதாரத்தை செம்மையாக வைத்துக்கொள்வது குறித்தும் அதிகாரிகள், மருத்துவா்களுடன் கலந்தாலோசிக்க அடுத்தவாரம் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நோய் வருமுன் காக்கும் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவது தொடா்பாக கொள்கை முடிவு எடுப்பது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

108 ஆம்புலன்ஸ் வேன் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி, டயாலிசிஸ் மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சில ஒப்பந்தப்புள்ளிகளை காங்கிரஸ் அரசு ரத்து செய்துள்ளது. மற்ற ஒப்பந்தப்புள்ளிகளை ஆய்வு செய்த பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT