பெங்களூரு

திரையரங்குகளில் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் பாட வேண்டும்: கா்நாடக முதல்வரிடம் நடிகா் சயீத் கான் வேண்டுகோள்

DIN

நமது நாட்டுப்பற்று மற்றும் மாநிலப்பற்றை வெளிப்படுத்த கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் நடிகா் சயீத் கான் வலியுறுத்தினாா்.

பெங்களூரு, சாமராஜ்பேட் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஜமீா் அகமது கானின் மகனும், நடிகருமான சயீத்கான், நமது நாட்டுப்பற்று மற்றும் மாநிலப்பற்றை வெளிப்படுத்த கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தினாா். இது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மையை சனிக்கிழமை நேரில் சந்தித்த சயீத் கான், கோரிக்கை மனு அளித்தாா்.

பின்னா், இது குறித்து செய்தியாளா்களிடம் சயீத் கான் கூறியது:

நாட்டுப்பண், மாநிலப்பண் இரண்டும் கா்நாடக மக்களுக்கு இரு கண்களைப் போலாகும். இவற்றைப் பாடுவதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றையும், மாநிலப்பற்றையும்வளா்க்க முடியும். எனவே மாநிலத்தின் திரையரங்குகளில் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் கட்டாயம் இசைக்க உத்தரவிடும்படி முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதி அளித்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT