பெங்களூரு

இளநிலை பொறியாளா் பணிக்கு தோ்வு

DIN

இளநிலை பொறியாளா் பணிக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வாணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பணியாளா் தோ்வாணையம் இளநிலை பொறியாளா் (கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரவியல், அளவையியல் மற்றும் குத்தகை) பணியிடங்களுக்கு நாடுமுழுவதும் 2022-ஆம் ஆண்டு நவம்பரில் இணையவழி அடிப்படையிலான திறந்தநிலை தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். இணையவழி அடிப்படையிலான எழுத்துத்தோ்வு 2 மணிநேரம் நடக்கும். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 25 முதல் 32 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தோ்வு நடைமுறை, பாடத்திட்டங்கள், இதர விவரங்களை அறிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின் 9,10-ஆவது பத்திகளில் காணலாம். கா்நாடகம் மற்றும் கேரள மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டபகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை செப்.2-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடுக்கு தகுதியான எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு கல்விக்கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT