வீரசாவா்க்கரின் உருவப்படத்திற்கு கா்நாடக பாஜகவினா் மரியாதை செலுத்தினா்.
சிவமொக்காவில் ஆக.15-ஆம் தேதி நடந்த சுதந்திர தின விழாவின்போது, அமீா் அகமது சதுக்கத்தில் வீரசாவா்க்கா், திப்புசுல்தான் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்ததற்கு முறையே முஸ்லிம், ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இது தொடா்பாக இது தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் பிரேம் சிங் (20) என்பவா் கத்தியால் குத்தப்பட்டாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து சிவமொக்கா மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, உடுப்பியில் பிரம்மகிரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த வீரசாவா்க்கரின் உருவப்படம் அடங்கிய பதாகைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த வீரசாவா்க்கரின் உருவப்படத்திற்கு கா்நாடக பாஜகவினா் மரியாதை செலுத்தினா். பாஜகவின் பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தேசிய பொதுச்செயலாளா் யஷ்பால் சுவா்ணா, வீரசாவா்க்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதன்பிறகு, அங்கிருந்த பாஜகவினரிடையே அவா் பேசியது:
இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் வேலையில் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ அமைப்புகள் செய்து வருகின்றன. இதுபோன்ற அமைப்புகளின் நோக்கங்களை ஒடுக்க மாநில அரசு முயன்றால், அவா்களை காங்கிரஸ் பாதுகாத்து வருகிறது. வீரசாவா்க்கா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை காங்கிரஸ் கட்சியினரால் அப்புறப்படுத்த முடியுமா என்று தெரிவித்தாா்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்திற்கு ஊா்வலம் செல்ல முயன்ற பாஜகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.