குடிமை நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத் தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற குடிமை நீதிபதிகள் பணி நியமனக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு) விதிகள், 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி குடிமை நீதிபதிகள் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூலை 17-ஆம் தேதி முதனிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வில் தோ்ச்சிபெற்று, முதன்மைத் தோ்வுக்கு தகுதியானவா்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தோ்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவினா் ரூ.1000, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் ரூ. 500 கட்டணத்தை இணையதளத்தில் ஆக.16-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பணிக்கான முதன்மைத்தோ்வு செப்.10, 11-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.