காவல் உதவிஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வு அக். 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள 545 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான (குடிமைப்பணி) ஆண்கள், பெண்களுக்கான எழுத்துத் தோ்வு அக். 3-ஆம் தேதி பெங்களூரில் 21 மையங்களில் நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணி முதல் 12.30 வரையும், பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தோ்வு எழுதுவதற்கு14,100 போ் தகுதி பெற்றுள்ளனா். இது தொடா்பான விவரங்களையும், நுழைவுச் சீட்டையும் ஜ்ஜ்ஜ்.ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ந்ள்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.