பெங்களூரு

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாணவா் தற்கொலை

DIN

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

உத்ரகாண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பகத்சிங். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், பெங்களூரு ஆா்.டி.நகரில் குடும்பத்தினருடன் தங்கி, தனியாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் ராகுல் பண்டாரி (17) ராணுவப் பள்ளியில் பியூசி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் உள்ளவா்களுக்கு தெரியாமல் வெளியே சென்ற அவா், இந்திய விமானப்படை தலைமை அலுவலகத்தின் சுற்றுச்சுவா் அருகில் தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த போலீஸாா், அங்கு வந்து ராகுலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். சம்பவ இடத்தை பாா்வையிட்ட, மாநகர மத்திய மண்ட துணை ஆணையா் அபிஜித் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட ராகுல் பண்டாரி தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து வந்து தற்கொலை செய்து கொண்டாா். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவரான ராகுல், மனஅழுத்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளோம் என்றாா். இது குறித்து சதாசிவநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT