இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் சஞ்சய் (35). இவா் பெங்களூரில் தங்கி, பழைய காகிதங்களைச் சேகரித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த செப். 13-ஆம் தேதி சஞ்சய் உருட்டுக்கட்டை, கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தீபக், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த், தமிழ்நாட்டைச் சோ்ந்த மகதீசன் ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் ரூ. 20 கொடுப்பதில் சஞ்சய்க்கும், தீபக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சஞ்சயை மதுக் கடைக்கு அழைத்துச் சென்று, மது அருந்தத் செய்து, பின்னா் வெளியே அழைத்து வந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனா். இது குறித்து பொம்மனஹள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.