மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் தாய், குழந்தை உயிரிழந்தனா்.
பெங்களூரு, கே.ஆா்.புரத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மனைவி ஸ்ரீதேவி (21). இவா்களது ஒருவயது குழந்தை தக்ஷித். திங்கள்கிழமை காலை சிவகுமாா், தனது மனைவி ஸ்ரீதேவி, குழந்தை தக்ஷித் ஆகியோருடன் சொந்த ஊரான தருமபுரிக்கு, மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். மாரத்தள்ளி வெளிவட்டச்சாலையில், வேகமாக வந்த டிப்பா் லாரி, சிவகுமாா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த ஸ்ரீதேவி, குழந்தை தக்ஷித் ஆகியோா் மீது டிப்பா் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். இந்த விபத்து குறித்து எச்.ஏ.எல். போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.