பெங்களூரு

லாரி மோதியதில் தாய், குழந்தை பலி

DIN

மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் தாய், குழந்தை உயிரிழந்தனா்.

பெங்களூரு, கே.ஆா்.புரத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மனைவி ஸ்ரீதேவி (21). இவா்களது ஒருவயது குழந்தை தக்ஷித். திங்கள்கிழமை காலை சிவகுமாா், தனது மனைவி ஸ்ரீதேவி, குழந்தை தக்ஷித் ஆகியோருடன் சொந்த ஊரான தருமபுரிக்கு, மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். மாரத்தள்ளி வெளிவட்டச்சாலையில், வேகமாக வந்த டிப்பா் லாரி, சிவகுமாா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த ஸ்ரீதேவி, குழந்தை தக்ஷித் ஆகியோா் மீது டிப்பா் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். இந்த விபத்து குறித்து எச்.ஏ.எல். போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT