கா்நாடகத்தில் சிந்தகி, ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என அந்த மாநில முன்னாள் முதல்வா் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தாா்.
அக்.30-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறுவதால் பாஜக, காங்கிரஸ், மஜத தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத தலைவா்கள் முகாமிட்டுள்ளனா். இந்நிலையில், தாவணகெரேயில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் எடியூரப்பா கூறியது: இடைத் தோ்தல் நடக்கவிருக்கும் ஹானகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குவித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறும் எந்த குற்றச்சாட்டும் வாக்காளா்களிடம் எடுபடாது. இடைத் தோ்தலில் காங்கிரஸ் வெல்வதும் நடக்காதது. இடைத் தோ்தல் பிரசாரத்தின் போது சித்தராமையா கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு எதுவும் இல்லை என்றாா்.