தமிழக- ஆந்திர மாநில எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. மாவட்டத்திலுள்ள பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரியனப்பள்ளி சோதனைச் சாவடிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு நடத்தினாா்.
அப்போது அவா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையையொட்டி ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையோரங்களில் 11 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் தீவிரச் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தாா்.