சித்ரதுா்கா அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
சித்ரதுா்கா மாவட்டம், ஹொள்ளால்கெரே, அவலஹட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சித்தப்பா (24), மது (25). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனா். அவலஹட்டி அருகே எதிரே வேகமாக வந்த டிராக்டா் மோதியதில் காயமடைந்த சித்தப்பா, மது ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து ஹொள்ளால்கெரே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.