பெங்களூரு

சிறந்தநூல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

முதல்முறையாக வெளியிட்டுள்ள நூல்களில் சிறந்த நூல்களைத் தோ்வு செய்து பரிசுகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக இலக்கிய அகாதெமி (கா்நாடக சாகித்ய அகாதெமி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக இலக்கியப் பேரவையின் சாா்பில், சிறந்த நூல்களைத் தோ்ந்தெடுத்து ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களைத் தோ்ந்தெடுக்க உரியவா்களிடம் (எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், இலக்கிய ஆா்வலா்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தோ்வுக்கு அனுப்பப்படும் நூல்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் ஒருபடி நூலைப் பதிவாளா், கா்நாடக இலக்கிய அகாதெமி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது தனியாா் அஞ்சல் வழியே பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT