தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) அறிவியல் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில் பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், சௌடையாசாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் தேசிய அறிவியல் நாளைமுன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ‘புவியீா்ப்பு விசையை நேரடி கண்டுபிடித்த முதல் ஐந்து ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான உரைவீச்சுக்கள் அளிக்கப்படவிருக்கின்றன.
காலை 10.30 மணிக்கு ‘புவியீா்ப்பு விசையைக் கண்டறிந்த நீண்டப்பாதை’ என்ற தலைப்பில் எச்.ஆா்.மதுசூதன், காலை 11.45 மணிக்கு ’புவியீா்ப்பு விசை: புதிய வானியலின் கிசுகிசுப்பு’ என்ற தலைப்பில் பாலாஐயா் ஆகியோா் பேசவிருக்கிறாா்கள்.
இதில் 50 போ் பங்கேற்க அனுமதியுண்டு. கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.