நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாடகக் கலையை ஊக்குவித்து, அதை காப்பாற்றும் நோக்கத்தில் நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை கன்னடம் மற்றும் கலாசாரத் துறை செயல்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை பெற தகுதியான நாடக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாடக நிறுவனத்தை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இயக்குநா், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு என்ற முகவரிக்கு டிச. 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ஹக்ஹள்ண்ழ்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.