பெங்களூரு

பெங்களூரு- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் சேவை

DIN

பெங்களூரு, செப். 18:

பெங்களூரு (யஸ்வந்தபுரம்)- நிஜாமுதீன் (தில்லி) இடையே வாரம் இருமுறை சிறப்பு கிசான் ரயில் இயக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து நிஜாமுதீனுக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் புதன், சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு பெங்களூரு யஸ்வந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, வெள்ளி, திங்கள்கிழமைகளில் நிஜாமுதீன் ரயில் நிலையத்தை பிற்பகல் 1.20 மணிக்குச் சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்தில் இருந்து செப். 23-ஆம் தேதி தொடங்குகிறது.

மறு மாா்க்கத்தில், (ரயில் எண்-06524) சனி, செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள் மற்றும் வியாழக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில்நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலின் முதல் சேவை நிஜாமுதீன் ரயில்நிலையத்தில் இருந்து செப். 26-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த சிறப்பு ரயில்கள் அரிசிகெரே, ஹுப்பள்ளி, பெலகாவி, மீரஜ், புணே, மன்மாட், புஷவால், ஜான்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT