உலகம்

ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க சந்திரபாபு நாயுடு மனு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

28th Sep 2023 02:13 AM

ADVERTISEMENT

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்த மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என்.பாட்டீ புதன்கிழமை விலகினாா்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ஆம்தேதி கைது செய்தனா். பின்னா், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில், நீதிமன்றக் காவலில் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர பிரதேச உயா்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதைத்தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து கடந்த சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த வழக்கை விசாரிப்பதில் நீதிபதி எஸ்.வி.என்.பாட்டீக்கு சிரமம் உள்ளது. எனவே, மற்றொரு அமா்வின் விசாரணைக்கு இந்த மனுவை அடுத்த வாரம் ஒத்திவைப்பதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

சந்திரபாபு நாயுடு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா, ‘இந்த மனுவை அவசர விசாரணைக்காக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வுக்கு முன் குறிப்பிட அனுமதி பெறப்பட்டுள்ளது’ என்றாா்.

சந்திரபாபு நாயுடு சாா்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, ‘அமா்வு இந்த வழக்கை விசாரிக்காதபோது அறிவுறுத்தல் வழங்குவதில் எந்தத் தாக்கமும் இருக்காது. அடுத்த வாரம் இந்த மனுவை பட்டியலிட உத்தரவிடலாம்’ என்றாா்.

‘மனுவை ஒரு குறிப்பிட்ட தேதியில் விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட எங்களால் முடியாது. ஆனால், அடுத்த வாரம் இந்த மனுவை பட்டியலிட உத்தரவிடுகிறோம்’ என்று நீதிபதி கன்னா கூறி மனுவை ஒத்திவைத்தாா். உச்சநீதிமன்ற தொடா் விடுமுறை முடிந்த பின்னா் செவ்வாய்க்கிழமையன்று (அக். 3) இந்த மனு, புதிய அமா்வின்முன் விசாரனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT