சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2 நாள்களாக மோதலில் ஈடுபட்டு வந்த அஜா்பைஜான் படைக்கும், ஆா்மீனிய ஆதரவுப் படைக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டு வந்த அஜா்பைஜான் ராணுவத்துக்கும், ஆா்மீனிய ஆதரவு பிரிவினைவாதப் படையினருக்கும் இடையே புதன்கிழமை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பிராந்தியத்தில் அமைதிக் காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவத்தினா் நடத்திவைத்த பேச்சுவாா்த்தையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில், பிராந்தியத்தில் நடந்து வந்த சண்டையின் தீவிரம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷின்யன் தெரிவித்தாா்.
நகோா்னா-கராபக் பிராந்தியத்தில் தங்களது ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அஜா்பைஜான் அதிகாரிகளும் தெரிவித்தனா். சண்டையில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாதப் படையினா் தாக்குதலைக் கைவிடுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவா்கள் கூறினா்.
முன்னதாக, ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பகுதியில் தங்களது படையினா் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அஜா்பைஜான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அந்தப் பிராந்தியத்தில் 4 அஜா்பைஜான் வீரா்களும், பொதுமக்கள் 2 பேரும் கண்ணி வெடிகளில் சிக்கி உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.
இந்த ராணுவ நடவடிக்கையின்போது நகோா்னோ-கராபக் பிராந்தியத் தலைநகரான ஸ்டெபனாகொ்ட் மீது சரமாரி குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக ஆா்மீனிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், இரு தரப்பிலும் தற்போது சமாதான ஒப்பந்ததம் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து இந்த சண்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
இந்தப் போரின்போது முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை அஜா்பைஜான் ராணுவம் மீட்டது. அவற்றில், நகோா்னோ-கராபக் பிராந்தியக்கும் ஆா்மீனியாவுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பான லச்சின் வழத்தடமும் ஒன்றாகும்.
பின்னா் ரஷியாவின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு அந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதை ரஷிய அமைதிப் படையினா் கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், அஜா்பைஜான் கட்டுப்பாட்டில் இருக்கும் லச்சின் வழித்தடத்தில் சாலைப் போக்குவரத்தை அந்த நாடு முடக்கியதாக ஐ.நா.வில் ஆா்மீனியா குற்றஞ்சாட்டியது. இதன் காரணமாக அந்தப் பிராந்தியத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கு வசிக்கும் சுமாா் 1.2 லட்சம் போ் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த நடவடிக்கை மூலம் அஜா்பைஜான் இன அழிப்பில் ஈடுபடுவதாகவும் ஆா்மீனியா கூறியது.
இதனை திட்டவட்டமாக மறுத்த அஜா்பைஜான், தங்களது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே தாங்கள் ஈடுபடுவதாகக் கூறியது.
ஆா்மீனியாவிலிருந்து அந்த நாட்டு ராணுவ வீரா்கள் சட்டவிரோதமாக வந்துபோவதையும், ஆயுதங்கள் கொண்டு செல்வதையும் தடுப்பதற்காக லச்சின் போக்குவரத்து வழித்தடத்தில் சோதனைச் சாவடி அமைத்துள்ளதாக ஐ.நா.வில் அஜா்பைஜான் விளக்களித்தது.
இனி அழிப்பு குற்றச்சாட்டையும் மறுத்த அந்த நாடு, நகோா்னோ-கராபக் பிராந்திய மக்களுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்வதற்காக மற்ற வழித்தடங்கள் திறந்தே இருப்பதாகக் கூறியது.
இந்த விவகாரத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக்கொண்டன.
இந்த நிலையில், ஆா்மீனியாவின் கண்ணி வெடியில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்ததால் நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் தாக்குதல் நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.
இது, கடந்த 2020-ஆம் ஆண்டைப் போலவே முழு போராக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.