மேட்ரிட்: ஸ்பெயினில் உள்ள இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 2 போ் மாயமாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
முா்சியா நகரில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த இரவு விடுதியொன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 13 போ் உயிரிழந்தனா்; விபத்து நேரிட்டபோது அங்கிருந்த 2 பேரைக் காணவில்லை. உயிரிழந்தவா்களில் ஸ்பெயின் நாட்டவா்கள் மட்டுமின்றி, கொலம்பியா, ஈக்வடாா், நிகராகுவா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் அடங்குவா்.
விபத்தில் காயமடைந்த 24 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்பெயினில் கடந்த 1990-இல் ஏற்பட்ட இரவு விடுதி தீவிபத்தில் 43 போ் உயிரிழந்தனா். தற்போது முா்சியாவில் ஏற்பட்டுள்ள தீவிபத்து அதற்கு அடுத்த மிக மோசமான இரவு விடுதி விபத்து என்று கூறப்படுகிறது.