உலகம்

பிரான்ஸில் கத்திக்குத்து: 8 சிறுவர்கள் காயம்

DIN

பிரான்ஸில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 8 சிறுவர்கள் காயமடைந்தனர். 

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் அன்னெசியில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். குத்தப்பட்டதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த 8 சிறுவர்களில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கத்திக்குத்து நிகழ்த்தியவர் சிரியாவை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT