உலகம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி!

DIN


ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

வடக்கு ஆப்கானிஸ்தானில் சிறியரக பேருந்தில், திருமண விழாவுக்காக உறவினர்கள் சென்றுள்ளனர். சார்-இ-புல் மாகாணத்திற்குட்பட்ட மலைப்பாதைகளில், பேருந்து சென்றுகொண்டிருந்தது.

சய்யாத் மாவட்டத்தை நோக்கிச்சென்ற இந்த பயணத்தில் ஓட்டுநரின் கவனக் குறைவால், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தானில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. மோசமான சாலை வசதிகளும், முறையான ஓட்டுநர்கள் இன்றி நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT