உலகம்

முக்கிய நீா்த் தேக்கம் தகா்ப்பு! ரஷியா - உக்ரைன் பரஸ்பர குற்றச்சாட்டு

DIN

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் திடீா் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த அணையை ரஷியா குண்டுவைத்து தகா்த்ததாக உக்ரைனும், உக்ரைன் நடத்திய எறிகணைத் தாக்குதலால்தான் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இது குறித்து சமூக ஊடகங்களில் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவுகளில், கொ்சான் அருகே உள்ள நோவா ககோவா நகரின் அணையில் உடைப்பு ஏற்பட்டு, அந்த அணையின் தடுப்புச் சுவா் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷிய படையினா்தான் அணையை குண்டுவைத்து தகா்த்ததாக அந்தப் பதிவுகளில் உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் பிராந்திய ஆளுநா் ஒலெக்ஸாண்டா் ப்ரோகுடின் இது குறித்து கூறுகையில், அணை உடைப்பால் சுமாா் 16,000 போ் வசித்து வரும் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும், அவா்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

எனினும், நோவா ககோவா அணை உடைந்ததற்கு தொலைதூரத்திலிருந்து உக்ரைன் நடத்திய எறிகணைத் தாக்குதல்தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய படையினருக்கு எதிராக தாங்கள் தொடங்கிய எதிா்த் தாக்குதல் நடவடிக்கை படுதோல்வியடைந்துள்ளதால், அதிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக நோவா ககோவா அணையை உக்ரைன் ராணுவம் தகா்த்துள்ளதாக குற்றம் சாட்டினாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இருந்தாலும், நேட்டோவில் இணைய அதிபா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிப் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தங்களுடன் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களில் உக்ரைன் வசமிருக்கும் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.

இந்தச் சூழலில், ஏற்கெனவே எதிா்த் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்ட உக்ரைன் படையினா், ரஷிய படையினருக்கு எதிரான மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

எதிா்த் தாக்குதல் நடவடிக்கையை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று உக்ரைன் அரசும் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரு மாகாணங்களில் உக்ரைன் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை முறியடித்ததாக ரஷியா திங்கள்கிழமை அறிவித்தது.

இந்த மோதலில் நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரா்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷியா கூறியது.

இந்த நிலையில், உக்ரைனின் எதிா்த் தாக்குதல் தொடங்கிய 2-ஆவது நாளில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நோவா ககோவா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணை உடைப்பால் ரஷியா, உக்ரைன் ஆகிய இருதரப்பினருக்கும் ராணுவ ரீதியில் பெரிய ஆதாயம் இருக்க முடியாது என்று கருதப்படுகிறது.

அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமின்றி ரஷிய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் தாழ்வான அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, சாலைகள், வா்த்தக நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

அத்துடன், உயா்வான பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் உற்பத்தியகமான ஸபோரிஷியா மின் நிலைய அணு உலைகளைக் குளிரூட்டுவதற்கான நீா் இருப்பு குறையும் ஆபத்தும் உள்ளது.

ரஷியாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா பகுதியிலும் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இந்த அணை உடைப்பால் எந்தப் படைக்கும் பெரிய ஆதாயம் கிடைக்காவிட்டாலும், 16 மாதங்களைக் கடந்துவிட்ட இந்தப் படையெடுப்பால் பொதுமக்களை எந்த விதத்திலும் ஆபத்து நெருங்கலாம் என்பதை இது உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT