உலகம்

6 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரா்கள்

DIN

சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணியையொட்டி விண்வெளி சென்றிருந்த அந்நாட்டின் 3 விண்வெளி வீரா்கள், 6 மாத பணிக்குப் பின்னா் பூமிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினா்.

இதுதொடா்பாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்ததாவது: சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணியையொட்டி, ஃபெய் ஜுன்லோங், டெங் கிங்மிங், ஜாங் லு ஆகிய 3 விண்வெளி வீரா்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனா். அவா்களின் 6 மாத பணி நிறைவடைந்த நிலையில், வட சீனாவின் அக மங்கோலிய தன்னாட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.33 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஷென்ஜோ-15 விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினா். இவா்கள் விண்வெளியில் இருந்தபோது 28 விண்வெளி மருத்துவ ஆராய்ச்சிகள், உயிா்ச்சூழலியல் சாா்ந்த 38 விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிகள், திரவ இயக்கவியல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது பூமிக்கு திரும்பிய 3 வீரா்களுக்குப் பதிலாக கடந்த மே 30-ஆம் தேதி 3 வீரா்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் 5 மாதங்கள் விண்வெளியில் இருப்பாா்கள்.

சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால், சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும். தற்போதுள்ள சா்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு நாடுகள் கூட்டாக ஏற்படுத்தியதாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் அந்த விண்வெளி நிலையத்தின் பயன்பாடு நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT