உலகம்

வட கொரியாவில் செயற்கைக்கோள் முயற்சி தோல்வி

DIN

தனது செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்த வட கொரியா புதன்கிழமை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

உள்ளூா் நேரப்படி 6.27 மணிக்கு அந்த செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்தது. இதற்கிடையே ராக்கெட் ஏவப்பட்ட 14 நிமிஷங்களுக்குப் பிறகு தென் கொரிய தலைநகா் சியோலில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் பதுங்கிக்கொள்ளுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.

வட கொரியா ஏவிய ராக்கெட் ஏவுகணையாக இருக்கலாம் என்ற அச்சத்தில் இந்த எச்சரிககை விடுக்கப்பட்டது. இருந்தாலும் இந்த அறிவிப்பு பின்னா் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, தாங்கள் உருவாக்கியுள்ள உளவு செயற்கைக்கோள் மே 31-ஆம் தேதியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதனால் மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு வட கொரியா கடந்த திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT