உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 போ் பலி

DIN

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

லாஸ் ஏஞ்சலீஸ் அருகில் உள்ள பெவா்லி க்ரெஸ்ட் நகரத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டன.

காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் இருவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. உயிரிழந்தவா்கள் குறித்த தகவலை போலீஸாா் உடனடியாக தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் கலிஃபோா்னியா மாகாணத்தில் இம்மாதம் நடைபெற்ற 4-ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT