ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
ஈரான் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஈரான்-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள கோய் நகரில் சனிக்கிழமை இரவு 9:44 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது. கோய் நகருக்கு தென்-தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: திரிபுரா: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஈரானின் மேற்கு அஜர்பைஜான் நகரின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் நகரின் தலைநகரான தப்ரிஸ் உள்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.