இத்தாலியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது.
இத்தாலியின் தெற்கு கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த அந்தப் படகில் 150-க்கும் மேற்பட்ட அகதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் பாறையில் மோதி கவிழ்ந்து உடைந்ததில், அதன் சிதறல்கள் அப்பகுதி கடற்கரையில் ஒதுங்கின.
இதில் உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது. முன்னதாக, விபத்தில் சிக்கிய 27 போ் நீந்தி கரை சோ்ந்தனா். 20-க்கும் மேற்பட்டோரை இத்தாலி கடலோரக் காவல் படையினா் மீட்டனா்.
தற்போது விபத்துப் பகுதியில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் பலா் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா்கள். இது தவிர, பாகிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்களும் விபத்துக்குள்ளான படகில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.