தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கானதங்கும் விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றுக்கு உரிமங்களை பெறுவதற்கு மற்றும் புதுப்பித்தலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.