பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியாவின் காண்ட்ரியன் பகுதியில் சனிக்கிழமையன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மெட்ரோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.