தென் அமெரிக்க நாடான பெருவில் தொடா் மழையால் மண், நீா், பாறைகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமான கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 36 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காமனா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான மிஸ்கியில் நிலச்சரிவில் புதையுண்ட 36 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனா். சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவால் 630 வீடுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழிந்துபோனதாகவும் அவா்கள் கூறினா்.