தங்களது வான் எல்லையில் சனிக்கிழமை சுட்டுவீழ்த்தப்பட்ட உளவு பலூனின் சிதறல்களை சீனாவிடம் திருப்பி அளிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ள சீன உளவு பலூனின் சிதறல்களை மீட்கும் நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன்தான் என்பது உறுதியாகியுள்ளது. அந்த பலூனை சீனா அனுப்பியது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.