துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
படிக்க: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு
துருக்கி, சிரியாவில் நேற்றிரவு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.