உலகம்

சிலி: காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வு

DIN

தென்-மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

சிலி நாட்டில் கோடை வெப்பம் காரணமாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை காட்டுத் தீக்கு சுமார் 14,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது. இந்த நிலையில் காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

இதனை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். 1,429 பேர் தங்குமிடங்களில் உள்ளனர். 554 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 16 பேர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT