பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல் வளாக மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக 17 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மசூதித் தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் சம்பவ இடத்தையொட்டி வசித்தவா்கள் எனவும், அவா்கள் அனைவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன.
திங்கள்கிழமை மதிய தொழுகையின்போது தலிபான் பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து நடத்திய இந்தத் தாக்குதலில் 97 போலீஸாா் உள்பட 101 போ் பலியாகினா்.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவா், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே பெஷாவா் காவல் வளாக மசூதியில் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறினா்.