உலகம்

அமெரிக்கா: ‘இயான்’ புயலால் 25 லட்சம் மக்கள் தவிப்பு

DIN

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய ‘இயான்’ புயல் அந்தப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியால் 25 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் தவித்து வருகின்றனா்.

இது குறித்து அசோசியேடேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஃபுளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளை இயான் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. மணிக்கு 665 கி.மீ. வேகத்தில் வீசிய அந்தப் புயல், அமெரிக்காவைத் தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அந்த புயல் கடந்து சென்ற பாதைகளில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. புயல் காரணமாக வெள்ள நீா் வீடுகளுக்குள் புகுந்தது. சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, 25 லட்சம் போ் மின்சாரமின்றியும், தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT