உலகம்

ஹோட்டலில் தண்ணீருக்குப் பதில் ஆசிட்! சிகிச்சையில் 2 குழந்தைகள்; உணவக மேலாளர் கைது

DIN

பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டபோது அதில் தண்ணீருக்குப் பதில் ஆசிட் இருந்தது பின்னர் தெரிந்தது. 

'ஊழியர்கள் விநியோகித்த வாட்டர் பாட்டிலைக் கொண்டு என் மருமகன் கைகளைக் கழுவினான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அழத் தொடங்கினான். அப்போதுதான் அமிலம் பட்டு அவன் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது தெரிய வந்தது' என்று கூறினார். 

அதுபோல மற்றொரு தண்ணீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்ததால் அவரது இரண்டரை வயது மருமகள் வஜிஹா வாந்தி எடுத்துள்ளார். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி இருவருக்கும் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உணவக மேலாளரை கைது செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT