உலகம்

உக்ரைனுக்கு உறுப்பினா் அந்தஸ்து: நேட்டோ உறுதி

DIN

தங்களது அமைப்பில் உக்ரைனை இணைத்துக் கொள்வதில் உறுதியுடன் இருப்பதாக நேட்டோ அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.

ருமேனியாவில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும், போரில் உக்ரைனுக்கு அளித்து வரும் உதவிகளைத் தொடரவும் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்டது.

தங்களது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில், நேட்டோ அமைப்பு இவ்வாறு உறுதிமொழி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT