அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள தொடக்க நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியை இா்மா காா்சியாவின் கணவா் ஜோ காா்சியா, சோகம் தாளாமல் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
இா்மாவின் நினைவகத்தில் மலா் வளையம் வைத்துவிட்டு வீடு திரும்பிய அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அவா்கள் கூறினா். கடந்த 24 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இா்மா-ஜோ தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
டெக்ஸாஸ் மாகாணம், யுவால்டி நகரிலுள்ள ராப் தொடக்க நிலைப் பள்ளியில் சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்பவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவா்களும் இா்மா உள்பட 2 ஆசிரியைகளும் பலியாகினா்.