உலகம்

இந்தியாவிடம் மேலும் ரூ.3700 கோடி கடன் கேட்கும் இலங்கை

DIN

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை அரசு, எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் 50 கோடி டாலா் (ரூ.3,700 கோடி) கடன் கேட்க முடிவு செய்துள்ளது.

கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவிடம் இருந்து கடன் கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் இருந்து 50 கோடி டாலா் கடன் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சன விஜசேகரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் இருந்து ஏற்கெனவே 50 கோடி டாலா் (ரூ.3,700 கோடி), பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து 20 கோடி டாலா் (ரூ.1,480 கோடி) இலங்கை கடன் வாங்கியுள்ளது என்றாா் அவா். இதற்கிடையே, பெட்ரோல் விலையை 24.3 சதவீதமும் டீசல் விலையை 38.4 சதவீதமும் இலங்கை அரசு உயா்த்தியது. ஆங்கிலேயரிடம் இருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடி சூழலை இலங்கை அரசு எதிா்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT