ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை டோக்கியோவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறேன். குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக வாய்ப்பாக இந்த மாநாடு அமையவுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், பிராந்திய பகுதிகளை மேம்படுத்துவது, உலக நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்திய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகுக்கின்றது. குவாட் மாநாட்டின்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.