உலகம்

ரஷியா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும்: அமெரிக்கா

DIN

ரஷியா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குது போருக்கு உதவுவது போன்றதென  ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கு அர்த்தம் ரஷியாவின் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென அர்த்தமாகுமா என கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. அதேசமயத்தில் இந்தியா ரஷியா மீது சர்வதேச அளவில் அழுத்ததை தர வேண்டும். அமெரிக்க அதிபர் பைடன் புதினுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா உட்பட எல்லா நாடுகளும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT