உலகம்

கருக்கலைப்பு உரிமைக்குத் தடை: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு

DIN

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவந்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இதன்மூலம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூா்வமாக்கிய 50 ஆண்டுகளுக்கு முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அரசியலமைப்புச் சட்ட உரிமை என 1973-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், 15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கலைப்பதற்கு மிஸிஸிப்பி மாகாணம் விதித்த தடையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், கருக்கலைப்புக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பை தடை செய்வது தொடா்பாக மாகாணங்களே முடிவு எடுத்துக் கொள்ள இந்தத் தீா்ப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் 50 சதவீத மாநிலங்கள் கருக்கலைப்பை தடை செய்து சட்டம் இயற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT