ஈரானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:
தெற்குப் பகுதி மாகாணமான ஹாா்மோஸ்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. தலைநகா் டெஹ்ரானுக்கு தெற்கே சுமாா் 1,000 கி.மீ. தொலைவில் சாயேஷ் கோஷ் கிராமத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தததில் 5 போ் பலியாகினா்; 44 போ் காயமடைந்தனா். நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட அதிா்வுகள் பல அண்டை நாடுகளிலும் உணரப்பட்டன என்று அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.