உலகம்

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் ஆபத்து: உலக சுகாதார மையம்

DIN

மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

குரங்கு அம்மையால் ஏற்படும் வெடிப்பைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவுவதைத் தடுக்கவும், புதிய பாதிப்புகளை  கண்டறியவும் அனைத்து நாடுகளும் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று  உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய், பொதுவாக காட்டு விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் பரவி வருகிறது. இந்த நோய் உடல், சுவாச நீர்த்துளிகள் மற்றும் பிற அசுத்தமான பொருட்கள் மூலம்  பரவுகிறது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் இந்த நோயின் அறிகுறிகளாகும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மே 13 முதல் ஜூலை 1 வரை, 51 நாடுகளில் 5,100 மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், குரங்கு அம்மை நோய் பரவல் மே மாதத்தில் பரவாத நாடுகளில் பரவ தொடங்கியது.

கடந்த இரண்டு வாரங்களில் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா தலைவர் இன்று எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT