உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் பலி

DIN


அபுதாபியில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அபுதாபியில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்தன. மேலும், விமான நிலையத்தின் நீட்சியாகப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இதில் டேங்கர்கள் வெடித்ததில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபற்றி ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதீர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இந்தியர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது" என்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதரகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் அருகே முசாஃபாவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்காக சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்பிலேயே உள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT