உலகம்

இந்தோனேசிய எரிமலையில் சீற்றம்

DIN

இந்தோனேசியாவின் மிக உயரமான எரிமலையில் சீற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களை மீட்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக உயரமான செமேரு எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை சீற்றம் ஏற்பட்டது. இதனால் 1,500 மீட்டா் உயரத்துக்கு சாம்பல் மண்டலம் எழுந்தது.

அதையடுத்து அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் ஊா்களில் ஏராளமான வீடுகள் சாம்பலில் புதையுண்டன. இதில் யாரும் உயிரிழந்ததாக உடனடி தகவல் இல்லை.

எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதி வானிலையில் திங்கள்கிழமை சற்று முன்னற்றம் இருந்ததால், அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினா் தொடங்கியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT