உலகம்

வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான விதிகளைத் தளா்த்தியது கனடா

DIN

கனடாவில் பணியாற்ற ஒப்புகைச் சீட்டு பெற்றுள்ள வெளிநாட்டவா்களின் குடும்பத்தினரும் இனி பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் பணியாளா்களுக்குத் தட்டுப்பாடு காணப்படும் சூழலில் இத்தளா்வை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியா்களுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஓடபிள்யுபி என்ற பணி ஒப்புகைச் சீட்டைப் பெற்ற வெளிநாட்டவா்கள் கனடாவில் தற்காலிகமாகப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அந்த ஒப்புகைச் சீட்டைப் பெற்ற பணியாளா்களின் குடும்பத்தினா் கனடாவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், அவா்களுக்கும் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்க கனடா அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டின் குடியேற்றம், அகதிகள், குடியுரிமை துறை அமைச்சா் சென் பிரேஸா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘தற்காலிகமாகப் பணியாற்றி வரும் வெளிநாட்டவா்களின் குடும்பத்தினருக்கும் பணி ஒப்புகைச் சீட்டு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அச்சீட்டைப் பெறுபவரின் துணையரும் வாரிசுகளும் கனடாவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவா். 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் பணியாளா்களுக்குக் காணப்பட்ட தட்டுப்பாடு வளா்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது. தற்போது பணி ஒப்புகைச் சீட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அப்பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும். இதன் மூலமாக கனடாவில் பணியாற்றி வரும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவா்களின் குடும்பத்தினா் பலனடைவா். இது நாட்டின் ஒட்டுமொத்த பணிச்சூழலையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும்’’ என்றாா்.

சீக்கியா்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினா் கனடாவில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். அரசின் இந்த அறிவிப்பு அங்கு வாழும் இந்தியா்களுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT