மியான்மரில் 7 பல்கலைக்கழக மாணவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளை தொடா்பாக அவா்களுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகியின் அரசைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தங்களுக்கு எதிரானவா்களை அடக்குவதற்கு மரண தண்டனையை ராணுவம் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.