உலகம்

சீன நகரங்களில் கட்டாய கரோனா பரிசோதனை உத்தரவு ரத்து

DIN

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களுக்கு இடையே, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டாய கரோனா பரிசோதனை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

சீனா முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தலைநகா் பெய்ஜிங், தியான்ஜின், செங்டு, ஷென்ஷென் உள்ளிட்ட நகரங்களில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

செங்டு, குவாங்ஷோவ் ஆகிய நகரங்களைச் சோ்ந்தவா்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கு கரோனா பரிசோதனைச் சான்றிதழைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும், பொதுப் போக்குவரத்து பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு தொடா்கிறது.

கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, பெய்ஜிங் நகரில் வா்த்தக வளாகங்கள் சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கின. இருந்தாலும், சில வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவதற்கான தடை நீடிக்கும் என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கடந்த 3 ஆண்டுகளாக சீனாவின் கரோனா தடுப்புக் குழுவுக்கு தலைமை தாங்கி வரும் துணை பிரதமா் சுன் சுன்லான், தேசிய சுகாதார ஆணைய நிபுணா்களை கடந்த புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது கரோனாவின் ஒமைக்ரான் ரகம் இதுவரை இல்லாத வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என்றாலும், அதனால் தீவிர உடல்நல பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என்பதை அவா் ஒப்புக் கொண்டதாகவும் அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அத்துடன், கரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளில் மிதமான, சிறந்த பலனளிக்கும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தியதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.

அதனைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டாய கரோனா பரிசோதனை உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய கரோனா சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அமெரிக்கா போன்ற பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த நாட்டில் கரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

சீன அரசின் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே அங்கு அந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினமும் அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிபட்ச அளவைத் தொட்டு வருகிறது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.

இந்தப் பின்னணியில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தக் கட்டடத்திலிருந்தவா்களை வெளியேற விடாமல் அதிகாரிகள் தடுத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞா்களை பலி வாங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.

அதையடுத்து, அந்த நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையிலும், அந்த நோய்க்கு எதிரான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT